கடைசி நேரத்தில் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Rohit Sharma Suryakumar Yadav IPL 2023
By Sumathi Mar 29, 2023 06:59 AM GMT
Report

ஐபிஎல் 16ஆவது சீசனில் ரோஹித் ஷர்மா பங்கேற்காமல் ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 16

ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ், கடந்த 2 சீசனில் மோசமாக சொசப்பியிருந்தது. இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடைசி நேரத்தில் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Rohit Sharma Not In Ipl Match 2023

இந்நிலையில், ஐபிஎல் 16ஆவது சீசனின் பாதி போட்டிகள் முடிந்தப் பிறகு ரோஹித் ஷர்மா பங்கேற்காமல் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவார் என்றும், அப்போது ரோஹித் ஆலோசகராக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே பும்ரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 16ஆவது சீசன் முடிந்த உடனே, ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இருக்கிறது. இடையில், ஆசியக் கோப்பையும் நடைபெறும். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தடுத்து பெரும் சவால்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.