என்னடா இது - மேட்ச் ஜெயிச்சும் கேப்டன் ரோகித் சர்மாவின் படுமோசமான சாதனை!!
நேற்று நடைபெற்ற ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி ஆப்கனிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்தியா வெற்றி
சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியாக இந்திய அணி ஆப்கனிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் 8(13), விராட் 24(24) என ரிஷப் பண்ட் 20(11) என 62 ரன்கள் சேர்பதற்குள் வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நேர்த்தியாக விளையாடினார். 53(28) ரன்களை எடுத்து அவர் அவுட்டாக, ஹர்திக் பாண்டியா 32(24) ரன்களை சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181/8 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வெளியேற்றினர் இந்திய பௌலர்கள்.அதிகபட்சமாக அந்த அணியில் அஸ்மத்துல்லா உமர்சாய் 26 (20) எடுத்தார்.
மோசமான சாதனை
இந்திய அணி தரப்பில் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினார். 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஐசிசி தொடர்களில் ரோகித் சர்மா இதுவரை 19 முறை ஒற்றை இலக்க ரன்களில் தனது விக்கெட்டை இழந்திருக்கிறார்.
இந்த மோசமான சாதனையில் அடுத்த இடத்தில் யுவராஜ் சிங்(17), விராட் கோலி (14) முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.