நான் அடித்த முதல் சதமா...? - செய்தியை கவனத்தில் கொண்டு வெளியிட வேண்டும்...? - ரோகித் சர்மா ஆதங்கம்...!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Nandhini Jan 26, 2023 07:02 AM GMT
Report

3 ஆண்டுகளுக்கு பிறகு நான் அடித்த முதல் சதம் என்பதா, செய்தியை கவனத்தில் கொண்டு வெளியிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு வருகை தந்த நியூசிலாந்து அணி 3-வது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது.

நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா களத்தில் இறங்கினர். முதல் பந்திலிருந்தே ரோகித் அதிரடியாக விளையாடினர்.

நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்கவிட்டார். இப்போட்டியில், கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். ரோகித் சர்மாவிற்கு இது 30வது சதமாகும்.

rohit-sharma-indian-cricket-team

ரோகித் சர்மா ஆதங்கம்

இப்போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் சதம் அடித்தேன் என்று ஒளிபரப்பு நிறுவனம் செய்திகளை வெளியிட்டுள்ளது. நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 12 ஒருநாள் போட்டியில் தான் விளையாடியுள்ளேன்.

3 ஆண்டுகள் என்று சொல்வது அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும். ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும்.

2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக எந்த போட்டியும் நடக்கவில்லை. நாம் அனைவரும் வீட்டில் இருந்தோம். இதன் பிறகு, இந்திய அணி ஒருநாள் போட்டியில் பெரியளவில் விளையாடவில்லை.

காயம் காரணமாக அந்த சமயத்தில் நான் 2 டெஸ்ட் போட்டியில்தான் ஆடியிருந்தேன். எனவே நீங்கள் இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும் என்றார்.