தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விலகல் - காரணம் என்ன?
மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது ரோகித்தின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓமைக்ரானின் அச்சுறுத்தல் காரணமாக, தொடர் பயோ-பப்பில் அணி இருக்கும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ,விருத்திமான் சாஹா , ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.