கையில் பாய்ந்த பந்து..! துடித்துப்போன ரோஹித் சர்மா - ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Rohit Sharma Indian Cricket Team
By Thahir Dec 07, 2022 08:05 AM GMT
Report

கையில் பந்து பட்டத்தில் காயம் அடைந்த ரோஹித் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஸ்லிப் திசையில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் சர்மா, 2ஆவது ஒவரில் வந்த கேட்ச்சை பிடிக்க முயற்சிக்கும் போது, பந்து கையில் பட்டு காயமடைந்தார்.

Rohit Sharma - Hospitalized with bleeding injuries

இதனால் இடது கையில் காயம் ஏற்பட்டு வலியால் ரோஹித் சர்மா, துடித்தார். ரோஹித் சர்மாவை சோதித்த இந்திய அணியின் மருத்துவக்குழு எக்ஸ்-ரே சோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.