மைதானத்திற்குள் திடீரென கோல்ஃப் வாகனத்தை ஓட்டிச் சென்ற ரோகித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 தொடர்
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியிலும்,வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா அபார வெற்றி
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும், தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்ரன் ஹெட்மயர் (56), ப்ரூக்ஸ் (13) மற்றும் டீவன் தாமஸ் (10) ஆகிய மூவரை தவிர,
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 15.4 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மைதானத்திற்குள் வாகனத்தை ஓட்டிய ரோகித் சர்மா
இந்த தொடர் மூலம் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ரோகித் சர்மா கோல்ஃப் வாகனத்தை மைதானத்திற்கு தனது அணியின் வீரர்களுடன் ஓட்டிச் சென்றார்.
Another victory lap by the India players as @ImRo45 drives a golf cart along the west grandstand for him and the rest of the @BCCI players to show their appreciation to the Florida fans. pic.twitter.com/KcKqcd6DaU
— Peter Della Penna (@PeterDellaPenna) August 7, 2022
அவர் வாகனத்தை இயக்கியதை பார்த்த ரசிகர்கள் சத்தமிட்டு ஆராவாரம் செய்தனர்.
பின்னர் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களிடம் கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.