பெரிய தவறு செய்த டெல்லி அணி : கடுப்பான ராபின் உத்தப்பா

delhicapitals shikhardhawan robinuthappa ipl2022
By Petchi Avudaiappan Dec 02, 2021 11:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைக்கும் முடிவில் டெல்லி அணி தவறு செய்து விட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

பெரிய தவறு செய்த டெல்லி அணி : கடுப்பான ராபின் உத்தப்பா | Robin Uthappa Feels Delhi Capitals Decision

அதன்படி ரிஷப் பண்ட்(16கோடி), அக்‌ஷர் பட்டேல்(9கோடி),  ப்ரித்வி ஷா(7.5 கோடி), அன்ரிச்நோர்கியா(6.5 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷிகர் தவானை தக்க வைக்காமல் விட்டது முட்டாள்தனம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். 

ஷிகர் தவான் டெல்லி அணிக்கான தனது முழு பங்களிப்பையும் சரியாக செய்து கொடுத்துள்ளார். அதே போல் ரபாடாவை டெல்லி அணி தக்க வைக்காததும் முட்டாள்தனம் என்பதே எனது கருத்து.

நோர்க்கியாவுடன் சேர்த்து ரபாடாவையும் தக்க வைத்திருந்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றிய கவலையே டெல்லி அணிக்கு இருந்திருக்காது. டெல்லி அணியின் இந்த முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது எனவும் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.