சாலை விபத்து..திருமணமான 3 நாட்களில் உயிரிழந்த புதுமண தம்பதி

Death Accident Newlywed couple Thiruvallur
By Thahir Nov 01, 2021 02:00 PM GMT
Report

கார் மீது லாரி மோதியதில் புதுமண தம்பதி நசுங்கி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). மருந்து விநியோகஸ்தராக வேலை பார்த்து வந்தார். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்தவர் கார்த்திகா (30). தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவருக்கும், கடந்த 28ம் தேதி விமரிசையாக திருமணம் நடந்தது. இந்நிலையில், இருவரும், பெருங்களத்தூரில் உள்ள மாமனார் தாய் வீட்டுக்கு வந்திருந்தனர்.

பின்னர் அங்கிருந்து, அரக்கோணத்துக்கு செல்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே மப்பேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே அரக்கோணத்தில் இருந்து சிமெண்ட் டேங்கர் லாரி வந்தது.

கூவம் ஆற்றின் வளைவில் எதிர்பாராத விதமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் மனோஜ்குமார், கார்த்திகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சாலை விபத்து..திருமணமான 3 நாட்களில் உயிரிழந்த புதுமண தம்பதி | Road Accident Newlywed Couple Death Thiruvallur

தகவல் அறிந்து மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோனியார் ஸ்டாலின், எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தி, காரை உடைத்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.