பத்திரமா இருங்க கேரள மக்களே.. கேரள மக்களுக்கு ராகுல் காந்தி ட்விட்
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2 ம் அலை குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதால், கேரளாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
Rising cases of Coronavirus infections in Kerala are worrying.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2021
I appeal to our brothers and sisters in the state to follow all safety measures & guidelines.
Please take care.
இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்:
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளித்து வருகிறது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதலையும் கேரள மக்கள் பின்பற்றுமாறு கேரளாவில் உள்ள சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.