மீண்டும் பேட்டை பறக்கவிட்ட ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ

Viratkohli Rishabhpant INDvSAF
By Petchi Avudaiappan Jan 13, 2022 06:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது. 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பண்ட் 100 ரன்களும் எடுக்க இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 111 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இப்போட்டியில் ரிஷப் பண்ட் 87 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது ஓலிவர் வீசிய பந்தை அடிக்க முற்பட்டார். அப்போது அவரது பேட் கையை விட்டு விலகி அந்தரத்தில் பறந்தது. நல்லவேளையாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.