ரிஷப் பண்டிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - நடிகை ஊர்வசி ரவுடேலாவின் தாயார் வேண்டுகோள்..!

Rishabh Pant Instagram Accident Urvashi Rautela
By Nandhini Jan 03, 2023 07:04 AM GMT
Report

ரிஷப் பண்டிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகை ஊர்வசி ரவுடேலாவின் தாயார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

சமீபத்தில் ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார்.

இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பந்த். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது மருத்துவமனையில் பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ரிஷப் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

rishabh-pant-urvashi-rautela-mother-meera-rautela

ஊர்வசி ரவுடேலாவின் தாயார் வேண்டுகோள்

இந்நிலையில்,  ஊர்வசி ரவுடேலாவின் தாயார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், வதந்திகள் ஒரு பக்கம். சித்தபாலிபாபா உங்கள் மீது சிறப்பு ஆசிகளைப் பொழியட்டும். நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவைப் பார்த்த பல நெட்டிசன்களும், ரிஷப்பின் ரசிகர்கள் தாயாரின் பதிவை பாராட்டி வருகின்றனர்.