அந்த ஒரே ஒரு இரவு... லெஜண்ட் ஹீரோயினுக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் முட்டிய சண்டை - ரசிகர்கள் ஷாக்
தி லெஜண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள படம் “தி லெஜண்ட்”. இப்படத்தில், ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் கடந்த 28ம் தேதி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பாக்ஸ் ஆபீஸ் நல்ல வசூலை வாரி அள்ளியுள்ளது.
நடிகை ஊர்வசி பேட்டி
நடிகை ஊர்வசியும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் காதலித்ததாக முன்பு கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசுகையில், மிஸ்டர் ஆர்.பி. டெல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் எனக்காக இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார் என்றார்.
எரிச்சலான பண்ட்
இதனையடுத்து, யார் பெயரையும் குறிப்பிடாமல் பண்ட் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சிலர் விளம்பரம் தேடவும், தலைப்புச் செய்தியாக மாறவும் பேட்டிகளில் பொய் சொல்வது காமெடியாக உள்ளது என்றார். இதன் பின்னர், அந்த போஸ்டரை அவர் நீக்கிவிட்டார்.
நடிகை ஊர்வசி பதிலடி
இதைப் பார்த்த நடிகை ஊர்வசியோ பதிலுக்கு ஒரு பதிவு போட்டார். அதில், சின்னத் தம்பி... பேட், பால் விளையாடணும். நீங்கள் அசிங்கப்படுத்த நான் ஏமாற மாட்டேன் என்று பதிவிட்டார்.
இதனையடுத்து பண்ட் தன் இன்ஸ்டா ஸ்டோரில், நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்திற்காக வருத்தப்படாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது நடிகை ஊர்வசியை கிண்டல் செய்து பண்ட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். கிரிக்கெட்டில் ரீடேக் எதுவும் கிடையாது. தன் விளையாட்டில் பண்ட் கவனம் செலுத்துங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.