ரிசப் பண்ட்-காக டெல்லி அணி செய்த செயல் -ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Delhi Capitals Rishabh Pant IPL 2023
By Sumathi Apr 02, 2023 08:11 AM GMT
Report

 ரிஷப் பண்ட்காக டெல்லி அணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து டெல்லி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கங்குலி,

ரிசப் பண்ட்-காக டெல்லி அணி செய்த செயல் -ரசிகர்கள் நெகிழ்ச்சி! | Rishabh Pant Jersey Delhi Capitals Dug Out

"இந்திய அணி அவரை மிஸ் செய்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அவர் இளைஞர் ஆகவே அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அவர் சிறந்த வீரர். குணமடைய அவர் இன்னும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் குணமாக நாங்கள் வாழ்த்துகிறோம். விரைவில் அவரை சந்திப்பேன்" எனத் தெரிவித்தார்.

டெல்லி அணி

இந்நிலையில், பண்ட் சிகிச்சையில் இருப்பதால் டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்சர் படேல் துணை கேப்டனாக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரிசப் பண்ட்-காக டெல்லி அணி செய்த செயல் -ரசிகர்கள் நெகிழ்ச்சி! | Rishabh Pant Jersey Delhi Capitals Dug Out

தொடர்ந்து, நேற்றைய போட்டியில் டெல்லி அணி, லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியின் போது லக்னோ மைதானத்தில் டெல்லி அணியின் டக் அவுட்டில் ரிசப் பண்ட்டின் ஜெர்ஸியை தொங்க விட்டு டெல்லி அணி போட்டியில் விளையாடியது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.