ரிஷப் பண்ட் கார் விபத்து; ஐபிஎல் 2023ல் வாய்ப்பு பறிபோனது - ரசிகர்கள் சோகம்...!

Rishabh Pant IPL 2023
By Nandhini Jan 02, 2023 09:03 AM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் 2023 ஐ இழக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

சமீபத்தில் ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விபத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பந்த். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

rishabh-pant-car-accident-ipl

ஐபிஎல் 2023 வாய்ப்பில்லை

இந்நிலையில், Cricbuzzன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கார் விபத்தில் சிக்கிய ரிஷப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. ரிஷப்பிற்கு நெற்றியில் 2 வெட்டுக் காயங்கள், அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன இப்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு MRI ஸ்கேன் செய்யப்பட்டு, காயங்களின் அளவைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

அவரின் உடல்நிலைக் கருதி பண்ட் இந்த விளையாட்டில் பங்கேற்க முடியாது. மேலும், அவர் IPL 2023 பிரச்சாரத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.