என்னால முடியல.... ரொம்ப வலிக்குது... கண்கலங்கிய ரிஷப் பண்ட்... - வெளியான தகவல் - ரசிகர்கள் சோகம்...!
‘எனக்கு ரொம்ப வலிக்குது’ என்று இந்திய கிரக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கண்கலங்கியதாக வெளியான செய்தியால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
நேற்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார்.இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பந்த். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்கலங்கிய ரிஷப் பண்ட்
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டை, அந்த வழியே வந்த, பஸ் ஓட்டுனர் சுஷில் குமார், நடத்துனர் பரம்ஜீத், மேலும் இருவரும் காப்பாற்றினர். ரிஷப்பை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ரிஷப் 108 ஆம்புலன்சில் செல்லும்போது, உதவிக்கு மருத்துவர் மோனு குமார் என்பவருடன் சென்றார்.
இது குறித்து மோனுகுமார் செய்தியாளர்களின் பேசுகையில்,
சம்பவத்தன்று ரிஷப் பண்ட்டுக்கு கண், மூக்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரது பின்புறத்திலும், காலிலும் கூட படுகாயம் ஏற்பட்டது. ஆம்புலன்சில் ரிஷப்புடன் நான் வந்துக்கொண்டிருந்தேன். அப்போது, நான் ரிஷப்பிடம் உங்களது பெயர் என்ன? என்று கேட்டேன். அதற்கு பண்ட் தனது பெயர் ரிஷப் பண்ட் என்று கூறினார். நான் இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்றார்.
உடனே ரிஷப் என்னிடம், பிரதர் எனக்கு ரொம்ப வலிக்குது... ப்ளீஸ் பிரதர் வலி நிவாரண ஊசியை முதலில் போடுங்கள்.... என்னால் முடியல... என்று கலங்கியபடி தழுதழுத்த குரலில் பேசினார். உடனே, 108 ஆம்புலன்சில் இருந்தவர்களிடம் அனுமதி பெற்று நான் உடனே அவருக்கு வலி நிவாரணி ஊசியை போட்டேன்.
அப்போது, ரிஷப் என்னிடம், பிரதர் என்னை ஒரு நல்ல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார். பண்ட்டை விபத்து பகுதியிலிருந்து 10-12 கி.மீ. தொலைவிலுள்ள ரூர்கியில் உள்ள சாக்ஷாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம் என்றார்.
தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியானதால் ரிஷப்பின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.