சொட்ட.. சொட்ட.. ரத்த வெள்ளத்தில் ரிஷப் பந்த் - கார் விபத்து சிசிடிவி அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Cricket Viral Video Rishabh Pant Accident
By Nandhini Dec 30, 2022 09:07 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்துக்குள்ளான சிசிடிவி அதிர்ச்சியில் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்து

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியிலிருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது பயங்கர விபத்தில் சிக்கியது.

அதிவேகமாக சென்ற கார் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு, சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் பலத்த காயம் அடைந்துள்ளார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சாலை தடுப்பில் மோதிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக ரிஷப் பண்ட் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

வைரலாகும் சிசிடிவி வீடியோ

இது குறித்து போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோ சிசிடிவி வீடியோ காட்சிகள் -