ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம்!
ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
பிராண்ட் அம்பாசிடர்
ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் மற்றும் குர்தாக்களின் புதிய பிராண்ட் அம்பாசிடராக 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் திரு. அருண் ஈஸ்வர் கூறுகையில் "ராம்ராஜ் வேட்டிகளின் புதிய முகமாக ரிஷப் ஷெட்டியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த இணைப்பு எங்கள் பிராண்டை இன்னும் அதிக உயரத்திற்கு. கொண்டு செல்லும் என்று நாங்கள் உணர்கிறோம். நாங்கள் தென்னிந்திய மாநிலங்களைத் தாண்டி வட இந்தியாவிலும் விரிவடைந்து வருவதால், இந்த இணைப்பு எங்கள் பிராண்டிற்கு நிச்சயம் உதவும்" என்றார்.
பெருமை கொள்கிறேன்
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக அறிமுகமானது குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி கூறுகையில், தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றியையும், பாண் இந்தியன் மேடையில் பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைகொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் "இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் ராம்ராஜை இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக பயன்படுத்துவதை நான் காண்கிறேன்.
ஒரு பிராண்டாக இது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இது ஒரு வழி என்றும் கூறினார்.