பணக்கார மனைவியா இருந்தா இப்படிதான்.. ரகசியங்களை பகிர்ந்து கதறும் இளம்பெண்!
பணக்கார கணவருக்கு மனைவியாக இருப்பதில் உள்ள சிக்கல் குறித்து பெண் ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை
பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் சவுதி. இந்தப் பெண் கோடீஸ்வரரான ஜமாலை 2020-ல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் துபாயில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பெண் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் பல ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதில், துபாயின் கோடீஸ்வரரான ஜமாலை நான் திருமணம் செய்தபோது, சில சமரசங்கள் ஏற்பட்டன, அவை சாதாரணமாக செய்யக்கூடாதது. யாருடனும் நான் தோழமையாக இருக்கக் கூடாது என்பதே முதல் மற்றும் மிகப்பெரிய ஒப்பந்தம்.
மனைவி வேதனை
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சட்டத்தின்படி, ஜமால் இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார், இதற்கு சவுதியிடம் அனுமதி மட்டுமே கேட்க வேண்டும்.. இரண்டாவது பிரச்சனை எல்லா நேரத்திலும் கண்காணிப்பது. தனது போனில் ஃபோன் டிராக்கர் தொடர்ந்து இயங்கும்.
ஜமாலின் தொலைபேசியிலும் அது உள்ளது, சவுதியாலும் அவரை கண்காணிக்க முடியும். நீங்கள் எப்போதும் உங்கள் கணவருடன் இருக்க முடியாது. தனியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அவர் உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்கமாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அந்தக் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் வேறு. உங்களிடம் சமீபத்திய பிராண்ட்டில் வெளிவந்த பை இல்லையென்றால் நீங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்வீர்கள். ஆனால் இதுபோன்ற விஷயங்களால் தனிமைப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. அது உங்களை மக்கள் மத்தியில் வாழ விடாது. நான் எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.