5 கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் பரிசு தொகை.. படையெடுக்கும் கூட்டம் -எங்கு தெரியுமா?

Philippines World
By Vidhya Senthil Feb 20, 2025 06:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

5 கொசுக்களைப் பிடித்துக் கொடுத்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என நாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 கொசு

பிலிப்பைன்ஸ் உள்ள மண்டலியோங் மாகாணத்தில் அடிஷன் மலைக் கிராமம் உள்ளது. இங்கு 100,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் 28,234 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் பரிசு தொகை.. படையெடுக்கும் கூட்டம் -எங்கு தெரியுமா? | Reward For Catching Mosquitoes In Philippines

மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள் உள்பட 10 பேர் இறந்தது அந்நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல், ஒரு நூதன முயற்சியை முன்னெடுத்தார்.

புற்றுநோயால் இறந்த மனைவி..சாம்பலில் மண்பானை செய்த கணவர்- ஏன் தெரியுமா?

புற்றுநோயால் இறந்த மனைவி..சாம்பலில் மண்பானை செய்த கணவர்- ஏன் தெரியுமா?

பரிசுத் தொகை

அதாவது, 5 கொசுக்களை, உயிருடனோ, கொல்லப்பட்ட நிலையிலோ பிடித்துக் கொடுத்தால், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், உற்சாகம் அடைந்த கிராம மக்கள், கொத்துக் கொத்தாகக் கொசுக்களைப் பிடித்துக் கொண்டு, பணம் பெறுவதற்குப் படையெடுக்கத் தொடங்கினர்.

5 கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் பரிசு தொகை.. படையெடுக்கும் கூட்டம் -எங்கு தெரியுமா? | Reward For Catching Mosquitoes In Philippines

ஆனால் இந்த அறிவிப்பால் பெரிய சிக்கல் ஒன்றும் உருவாகியுள்ளது.கிமார மக்கள் சிலர் பணத் தேவைக்காக வீட்டிலேயே கொசுவை வளர்த்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.