தோசைக்கு சாம்பார் இல்லைனா எப்படி? - உணவகத்திற்கு அபாரதம் விதித்த நீதிமன்றம்..!

Bihar
By Thahir Jul 15, 2023 05:33 AM GMT
Report

பீகாரில் ரூ.140 கொடுத்து ஸ்பெஷல் மசால் தோசை வாங்கியதற்கு சாம்பார் தர மறுத்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாம்பார் கொடுக்காத உணவகம்

பீகாரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணீஷ் பதக், இவர், தனது பிறந்தநாளான கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இரவு தன் அம்மாவுடன், கோலா மார்க்கெட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

அந்த உணவகத்தில் ரூ.140 மதிப்புள்ள ஸ்பெஷல் மசாலா தோசையை பார்சல் வாங்கிச் சென்றிருக்கிறார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது மசால் தோசையுடன் சட்னி மட்டுமே இருந்துள்ளது. அதனுடன் சாம்பார் வைக்கப்படவில்லை.

தோசைக்கு சாம்பார் இல்லைனா எப்படி? - உணவகத்திற்கு அபாரதம் விதித்த நீதிமன்றம்..! | Restaurant That Doesn T Serve Sambar With Dosa

இதனால் ஏமாற்றத்துக்குள்ளான மனீஷ் பதக், இரவு நேரம் என்பதால் வேறு வழியில்லாமல் வெறும் சட்னியுடன் மட்டும் தோசையைச் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மறுநாள் அந்த உணவகத்திற்கு சென்று தோசையுடன் சாம்பார் வைக்காதது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததோடு ரூ.140 கொடுத்து தோசை வாங்கினால், மொத்த ஓட்டலையும் வாங்கிவிட முடியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

அபராதம் விதித்த நீதிமன்றம் 

இதையடுத்து மனீஷ் உணவகத்தின் சேவை நுகர்வோரை அவமதிப்பதாகவும், நம்பிக்கையை தகர்ப்பதாகவும் உள்ளதாக கூறி பக்சர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

வழக்கை விசாரித்த வேத் பிரகாஷ் சிங் மற்றும் வருண் குமார் ஆகியோர் 11 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்துள்ளனர்.

அந்த தீர்ப்பில், உணகத்தின் அலட்சியத்தால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.2,000 அபராதமும், வழக்குச் செலவாக ரூ.1,500 சேர்த்து மொத்தம் ரூ.3,500 தொகையை நுகர்வோர் மனீஷுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.