தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி..ஏற்றுக்கொள்ள மாட்டோம் - முதல்வர் !
எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மும்மொழி
சட்டப்பேரவையில் நேற்று இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.
அதேநேரம் கல்விக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசின் வழிகாட்டுதல், நிபந்தனையில் மாநில அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம். இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை.
அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால்,
அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.