கணவரை விட்டு பிரியும் பிரபல சீரியல் நடிகை... எல்லாம் இதுக்குதான் தெரியுமா?

Petchi Avudaiappan
in பிரபலங்கள்Report this article
பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த நடிகை ரேஷ்மா முரளிதரன் இதே சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்தவர் மதன் பாண்டியனை காதலித்து கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துக் கொண்டார்.
இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் ரேஷ்மா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிகர்களுக்கு மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் கொடுக்கும் வகையில் கணவர் மதன் பாண்டியனுடன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அபி டெய்லர்’ என்ற சீரியலில் அவர் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் ரேஷ்மா மீண்டும் தனது தாய் வீடான ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. பூவே பூச்சுடவா சீரியலை தயாரித்த அதே டீம் ரேஷ்மாவை இதில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் நடிக்க சம்மதித்தால் அந்த சீரியலில் ஹீரோவாக கணவர் மதன் நடிப்பாரா? அல்லது பூவே பூச்சுடவா சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ரசிகர்கள் ரேஷ்மா இரண்டு சீரியலிலும் நடித்தாலும் நாங்கள் பார்க்கத் தயார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.