300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 52 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Madhya Pradesh
By Thahir Jun 08, 2023 12:41 PM GMT
Report

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 52 மணி நேர போராட்த்திற்கு பின் மீட்கப்பட்டது.

குழந்தை மீட்பு 

மத்திய பிரதேசத்தின் மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2.5 வயது பெண் குழந்தை அருகில் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதையடுத்து குழந்தை விழுந்தது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Rescue of a child who fell into a borehole

300 அடியில் விழுந்த குழந்தையை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.