அம்பானியின் தாராளம் : 20 லட்சம் பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி...
தங்கள் பணியாளர்களின் குடும்பத்தினர் உட்பட 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தவிருக்கிறோம் என்று நீதா அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 44 வது ஆண்டுவிழா இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய, முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர்களில் ஒருவரான நீதா அம்பானி, ” தங்கள் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி போடப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோல் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி சம்பளக் குறைப்பு செய்யவில்லை. போனஸ் வழங்குவதையும் நிறுத்தவில்லை என்றும் நீதா அம்பானி கூறினார்.