எழுவர் விடுதலைக்கு இதை செய்யுங்கள்: திருமாவளவன் யோசனை!

Release thirumavalavan
By Irumporai May 21, 2021 12:17 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு  கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்:

7 தமிழர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

ஆகவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் .

அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.