திருமணம் ஆன நடிகருடன் உறவில் இருந்தேன்... - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி
பாலிவுட் பிரபல நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியங்களை வெளிப்படையாக கூறுவார்கள்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை கங்கனாவும் தன்னுடைய ரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். கங்கனா கூறுகையில், திருமணமான ஆண்களைதான் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்.
ஏனென்றால், அந்த விஷயத்தில் நான் அனுபவப்பட்டிருக்கிறேன். திருமணம் ஆன ஆண்கள்தான் புரிந்துகொள்பவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். இதுதான் இளம் பெண்களை கவர்கிறது. என் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையானது.
திருமணம் ஆன ஆண்களை இளம் பெண்கள் மனைவியிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால், மனைவியின் கதையை கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள் என்றார்.
கங்கனா கூறியதைக் கேட்டு அவர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கங்கனா வெளிப்படையாக பேசினாரே தவிர, அந்த நபர் யார் என்று கூறவில்லை.
ஆனால், நெட்டிசன்கள் கங்கனா, ரித்திக் ரோஷனைத்தான் கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரித்திக் ரோஷன், கங்கனா இடையேயான உறவு பெரும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை காவல் நிலையம் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.