பத்து வருஷமா எஞ்சாய் பண்ணிட்டு.. இப்போ MeTooவா ? : நடிகை ரேகா நாயாரின் சர்ச்சை பேச்சு

By Irumporai Aug 21, 2022 08:42 AM GMT
Report

நடிகைகள் சிலர் பணத்துக்காக வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்துவிட்டு 10 வருடங்களுக்கு பிறகு மீ டூ புகார் செய்வதெல்லாம் பொய் என்று நடிகை ரேகா நாயார் கூறியுள்ளார்.

ரேகாநாயார்

 இரவின் நிழல் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மீடூ புகார் குறித்து பேசியுள்ளதுதான் தற்போது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

பத்து வருஷமா எஞ்சாய் பண்ணிட்டு.. இப்போ MeTooவா ? : நடிகை ரேகா நாயாரின் சர்ச்சை பேச்சு | Rekha Nayar About Cast Metoo

மீடூ புகார்

அதில் ஷகிலாவுடன் ஒரு நேர்காணல் நிகழ்த்தியுள்ளார். அதில் ஒரு கேள்விக்கு,அக்கா, நீங்களும் சினிமாத்துறையில் தான் இருக்கிறீர்கள். நீங்களும் நானும் வாயில் விரலை வைத்துக் கொண்டில்லை.

ஒருவர் பேச்சும் பேச்சிலேயே நாம் அவர்களை கணித்துவிடுவோம் தானே. என்ன ரேகா ரொம்ப நாளாச்சு என்று ஒருவர் வழிந்தாலே அது எதுக்கு என்று தெரியும். ஒருத்தர் கூப்பிட்டால் பிடித்தால் போகப்போகிறார்கள்.

பிடிக்காவிட்டால் இருப்பார்கள். ஆனா, ஒரு படத்தை நடித்து 10 வருடம் கழித்து விட்டு அந்த இயக்குநர் என் மீது அங்க கை வைத்தார், இந்த இயக்குநர் இங்க கை வைத்தார் என்று கூறுவதை ஒத்துக்கவே முடியாது. அப்படின்னா பத்து வருடமாக என்ஜாய் செய்து கொண்டிருந்தீர்களா.

பத்து வருஷமா எஞ்சாய் பண்ணிட்டு.. இப்போ MeTooவா ? : நடிகை ரேகா நாயாரின் சர்ச்சை பேச்சு | Rekha Nayar About Cast Metoo

ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கூறுகிறீர்களே பெண்களும் என்ஜாய் செய்கிறார்கள் இதுவரைக்கும் எந்த டைரக்டரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வான்னு கூப்பிடவில்லை, எனக்கு தெரிந்து ஒரு இயக்குநரோ அல்லது ஒரு நடிகையோ காதல் வயப்பட்டு அதில் உடலுறவு கொள்கின்றனர்.

அதைத் தாண்டி இன்று என்னுடன் நீ படுக்க வந்தால்தான் சூட்டிங் என்று யாரும் சொல்ல முடியாது என்று கூறியுள்ள ரேகா நாயரின் பேச்சு சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

இரவின் நிழல்’ படத்தில் ரேகா நாயர் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அது குறித்து தவறான வகையில் விமர்சித்ததாக செய்தி வெளியானது.இதனையடுத்தே இருவரும் சண்டையிட்ட வீடியோ இணைய்த்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.