நிர்வாணமா போட்டோ அனுப்ப சொல்வான் : சித்ரா கணவர் ரகசியங்களை அம்பலப்படுத்திய நடிகை

Rekha Chitra V. J. Chitra
By Irumporai May 13, 2022 07:00 AM GMT
Report

விஜே சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார்.  

திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த ஹேமந்த் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார்.

நிர்வாணமா போட்டோ அனுப்ப சொல்வான் : சித்ரா கணவர்  ரகசியங்களை அம்பலப்படுத்திய நடிகை | Rekha Nair Shocking Vj Chithras Husband

மேலும் சித்ரா மரணத்திற்கு காரணம் சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் தான் என்றார். ஹேமந்தின் குற்றச்சாட்டுக்கள் வழக்கை திசை திருப்பும் முயற்சி என கூறப்படுகிறது. இந்நிலையில் சீரியல் நடிகையான ரேகா நாயர், ஹேமந்த் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

ஹேமந்த் சித்ராவுக்கு முன்பே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். பல பெண்களை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள முடியாது என கைவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அபார்ஷன் செய்து விட்டு தன்னிடம் ஹேமந்த் ஏமாற்றிவிட்டான் என அழுது புலம்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.   

நிர்வாணமா போட்டோ அனுப்ப சொல்வான் : சித்ரா கணவர்  ரகசியங்களை அம்பலப்படுத்திய நடிகை | Rekha Nair Shocking Vj Chithras Husband

மேலும் ஹேமந்த், திருமணம் ஆகி குடும்பத்தில் இருக்கும் பெண்கள், இளம்பெண்கள் என பலரிடம் டிரெஸ் இல்லாமல், சேலை இல்லாமல் போட்டோ அனுப்பு என்று கேட்டுள்ளார் என்றும் போனில் உடல் அங்கங்களை காட்டுமாறும் கேட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள ரேகா நாயர் அதையெல்லாம் தேவைப்பட்டால் கோர்ட்டில் காட்ட தயார் என்றும் கூறியுள்ளார்.