ரெட் அலர்ட் எச்சரிக்கையால் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

school leave tomorrow colleges tiruvallur
By Anupriyamkumaresan Nov 17, 2021 02:15 PM GMT
Report

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அதிகனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.