தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

By Irumporai Aug 01, 2022 09:08 AM GMT
Report

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் நிலவியது.

ரெட் அலார்ட்

இதனால் தமிழ்கத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் தாக்கியது , இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் :  வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை | Red Alert Tamil Nadu

அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.