தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை!
அயோத்தியாவின் ராம் கி பைடியில் 22.23 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபோத்ஸவ்
உத்திர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றார். அன்றே, தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அவர் அறிவித்தார்.
அந்த ஆண்டே அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கின்னஸ் சாதனை
மேலும், கடந்த 2022ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்கில் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளான இன்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.