திட்டம் போட்டு வெளியேற்றப்பட்ட ரோகித் சர்மா? - விராட் கோலி மீது புகார்
விராட் கோலியால் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மும்பையில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக பிரியன்க் பன்ச்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலியிடமிருந்து பறிக்கப்பட்டது. ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் விராட் கோலி இருந்ததாக கூறப்பட்டது.
இதனால் சரியான திட்டம் போட்டு வெளியேற்றப்பட்டார் ரோகித் சர்மா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்தால் தாம் அணிக்கு திரும்ப மாட்டேன் என்று விராட் கோலி கூறியதாகவும், அவரை சமதானப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனை அறிந்த ரோகித் சர்மா, தாம் ஒருநாள், டி20 போட்டியில் கவனம் செலுத்தி கொள்கிறேன். இதனால் டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்று கூறிவிட்டதாக
சொல்லப்படுகிறது. இதே போன்று ஒருநாள், டி20 போட்டியில் விராட் கோலியும் சிறிது காலம் விளையாடமல் டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறி, ரோகித் அணியில் அவர் இடம்பெறாமல் ஓய்வில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் இந்திய அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.