இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது : ஜாஸ் பட்லர் ஓபன் டாக்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மூலம் தனக்கு கிடைத்த அனுபவங்களை மறக்கவே முடியாது என ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற்றது.
இதில் ஐபிஎல் தொடருக்கு புதிய அணியான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்த நிலையில் அந்தவகையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் ராஜஸ்தான் அணியின் கதாநாயகனான ஜாஸ் பட்லர், இந்த தொடரின் மூலம் தனக்கு கிடைத்துள்ள அனுபவங்களை மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாஸ் பட்லர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இந்த தொடர் எனக்கு மிக முக்கியமான தொடர், இந்த தொடர் மூலம் கிடைத்த அனுபவங்களை மறக்கவே முடியாது.
Had a few days to reflect on the IPL season. Whilst very disappointed not to go all the way I want to say a huge thank you to everyone involved with the @rajasthanroyals from teammates, support staff and especially all fans! pic.twitter.com/W4d6eIUI2R
— Jos Buttler (@josbuttler) June 3, 2022
இந்த தொடரில் நான் படைத்த சாதனைகள் குறித்தும், எனது விளையாட்டு குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், அடுத்த தொடரில் கூடுதல் பலத்துடன் விளையாடி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்” என பதிவிட்டுள்ளார்.