செங்கல்பட்டு அருகே தொழிலதிபர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை...கொலையாளியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு போலீஸ்

By Praveen Apr 24, 2021 04:41 PM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் தொழில் அதிபர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியை சார்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆள் சப்ளை செய்யும் மேன்ஸ் ஆஃ ஏஜன்ஸி, ஸ்கிராப் என்ன படும் கழிவு பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார்.

பிரபல தொழில் அதிபரான இவருக்கு தொழில் போட்டியில் பல்வேறு முன் விரோதங்கள் இருந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இவரை கொல்ல முயற்சிகள் நடந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் திருமாறன் போலீஸ் பாதுகாப்பு கேட்க கன்மேன் ஒருவரை காவல்துறை நியமித்தது. இன்னிலையில் திருமாறனின் திருமண நாளை முன்னிட்டு பாதுகாப்பு காவலர் எழிலரசன் என்பவருடன் ரயில் நகர் பகுதியில் உள்ள செல்வ முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து சாமி கும்பிட்டார்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது மறைந்திருந்த 8 பேர் சேர்ந்த மர்ம கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுக்காப்பு காவலர் எழிலரசன் என்பவர் 8-பேர் கொண்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் திருமாறனின் உடலை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். திருமாறனுக்கும் முன்னாள் பங்குதாரர் ராஜேஷ் மற்றும் ஜெகன் என்பவர்களுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு அவர்களுக்குள் விரோதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமாறன் நாகலாந்து மாநிலத்தில் உரிமம் இல்லாமல் கைதுப்பாக்கி பெற்று தன்னுடைய பாதுகாப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைமலைநகர் காவல்துறையினர் சடலங்களை மீட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

செங்கல்பட்டு அருகே தொழிலதிபர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை...கொலையாளியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு போலீஸ் | Realestate Man Bomb Kill

செங்கல்பட்டு அருகே தொழிலதிபர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை...கொலையாளியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு போலீஸ் | Realestate Man Bomb Kill

செங்கல்பட்டு அருகே தொழிலதிபர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை...கொலையாளியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு போலீஸ் | Realestate Man Bomb Kill