குழந்தையை காப்பாற்றிய ரியல் ஹீரோ: பரிசுத்தொகையை என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றி சூப்பர் ஹீரோ என புகழப்பட்ட ரயில்வே ஊழியர் தனக்கான பணத்தில் பாதியை அந்த குடும்பத்தினரிடமே கொடுத்து நெகிழ வைத்துளள்ளார்.
மும்பை அருகே உள்ள இரயில் நிலையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ரயில்வே நடைமேடையில் குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருப்பார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை தண்டவாளத்தில் தவறிவிழவே, குழந்தையை மீட்க போராடினார், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வு ஊழியர் எதிர்புறமிருந்து வேகமாக ஓடிவந்து குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றினார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையை காப்பாற்றிய அவரை ரியல் ஹீரோ என மக்கள் கொண்டாடினர், அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி அவருக்கு பாராட்டுகளுடன் பரிசும் வழங்கப்பட்டது, இதை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர், அப்பணத்திலிருந்து பாதியை மாற்றுத்திறனாளி பெண்ணிடமே வழங்கி நெகிழ செய்துள்ளார்.