நாளை மறுவாக்குப்பதிவு - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

tnreelectionin5states electioncommissionannounces
By Swetha Subash Feb 20, 2022 01:18 PM GMT
Report

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களி 7 ஓட்டுச்சாவடிகளி 5 வார்டுகளுக்காக நாளை மறு ஓட்டுப்பதிவு நடைபெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 5 வார்டுகளில் 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நாளைதிங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி , மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி,

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி ஆகிய ஊர்களில் மொத்தம் 5 வார்டுகளில் உள்ள 7 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நாளை திங்கட்கிழமை அன்று காலை 7 :00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும்.

கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இடங்களில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாமை வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.