ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? குவியும் கோரிக்கை - திணறும் பிசிசிஐ

Royal Challengers Bangalore Bengaluru IPL 2025
By Sumathi Jun 09, 2025 09:30 AM GMT
Report

RCB அணிக்கு ஒரு வருட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

RCB அணிக்கு தடை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB IPL வெற்றி பேரணிக்காக கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் திரண்டனர். கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

RCB

தொடர்ந்து மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்கும் முன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், #BanRCB, #RCBStampede, #JusticeForFans போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கிரிமினல்; மன்னிப்பு கூட கேட்க முடியாது - முன்னாள் வீரர் விளாசல்

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கிரிமினல்; மன்னிப்பு கூட கேட்க முடியாது - முன்னாள் வீரர் விளாசல்

வலுக்கும் கோரிக்கை

RCB அணி களத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை விட பிராண்ட் மற்றும் பிரபலங்களின் ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சகர்கள் புகார் கூறுகின்றனர். ஐபிஎல் இன்ஸ்டாகிராம் அதிகாரபூர்வ கணக்கு, RCB அணியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது.

bengaluru

10 அணிகளையும் பின் தொடர்ந்த ஐபிஎல் பக்கம் இதற்கான காரணத்தை கூறவில்லை. இதன்மூலம், ஆர்சிபிக்கு தற்காலிக தடை, அபராதம் அல்லது சட்டரீதியான நடவடிக்கை என்று ஆர்சிபி மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், RCB அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.