விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடுவது மேல் - விஜயபாஸ்கரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்
அதிமுகவில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கரை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜயபாஸ்கர் தனது சொந்த நலன், வழக்குகளில் இருந்து தப்பித்தல் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே கட்சி மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதிமுக மூலம் பெற்ற அரசியல் செல்வாக்கு மற்றும் பதவிகளுக்கு நன்றியுணர்வு காட்டாமல் அவர் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “எதிரியாக கருதப்படும் விஜய்யிடம் சென்று சரணடைவதை விட உயிரை விடுவது மேல்” எனக் கூறிய அவர், விஜயபாஸ்கரின் இந்த முடிவு அதிமுக தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாகவும், கட்சியின் பாரம்பரியத்தை பாதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், விஜயபாஸ்கர் தனது முடிவு வேதனையுடன் எடுக்கப்பட்டதாகவும், இனியும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜயபாஸ்கர் ட்வீட் பதிவு

அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "என் இதயம் கனிந்த வேதனையுடனும் மனக்கசப்புடனும் இந்த இயக்கத்தில் இருந்து விலகுகிறேன்.
இது ஒரு கட்சியை விட்டு விலகுவது மட்டுமல்ல. என் வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்தியாயத்தை முடிப்பது போன்றது.
இந்த முடிவால் ஏற்பட்ட மனவேதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது. இருந்தாலும், நான் என் மக்களுக்காகவும் என் மண்ணுக்காகவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அரசியல் பயணத்தில் என் சேவை வழக்கம்போல தொடரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை IBC Tamil