கடைசி வரை நிறைவேறாத ஆசை: ஆர்.பி சௌத்ரி மரணத்தால் கலங்கும் பிரபலங்கள்

By Fathima May 06, 2026 05:36 AM GMT
Report

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரி சாலை விபத்தில் காலமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நல்ல மனுஷனுக்கு இந்த மாதிரி நடந்திருக்க வேண்டாம் என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர் குட் பிலிம்ஸ் எனக்கு ஒரு கோவில், ஆர்.பி.சௌத்ரிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், உஙகளது ஆன்மா சாந்தி அடையட்டும், என் இரங்கலும் பிரார்த்தனைகளும் என தெரிவித்துள்ளார்.

 

இயக்குனர் விக்ரமன், ஆர்.பி சௌத்ரி போட்ட பிச்சையினால் தான் நான் நிம்மதியாக சாப்பிடுகிறேன்,

சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தை பார்க்க அவர் இல்லை என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

100வது படத்தில் விஜய்யை ஹீரோவாக நடிக்கவைக்க விரும்பியதாகவும், அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி வரை நிறைவேறாத ஆசை: ஆர்.பி சௌத்ரி மரணத்தால் கலங்கும் பிரபலங்கள் | Rb Choudary Last Wish