ஆற்றில் தள்ளிவிட்ட தந்தை - சமயோஜிதமாக தப்பித்த 13 வயது சிறுமி
ஆந்திர மாநிலத்தில் ஆற்றில் தள்ளி விடப்படும் 13 வயது சிறுமி ஒருவர் சமயோஜிதமாக உயிர் தப்பித்த தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கீர்த்தனா
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகாசினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரிடம் இருந்து பிறந்து தனது 13 வயது மகள் கீர்த்தனாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், இவருக்கும் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த உள்ளவ சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஜெர்சி என்ற 1 வயது மகளும் உள்ளனர். திடீரென சுரேஷ் மற்றும் சுஹாசினிக்கு மத்தியில் கருத்து மோதல் ஏற்பட சுஹாசினி மற்றும் அவரது இரண்டு மகள்களையும் தீர்த்து கட்ட சுரேஷ் முடிவு செய்திருக்கிறார்.
இதன் காரணமாக அவர்களை பொருட்கள் வாங்கி கொடுப்பதாக கூறி, ராஜமுந்திரி நகருக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அருகே உள்ள ரவுலபாலம் ஊரில் கோதாவரி நதிக்கு மேலே அமைந்துள்ள கவுதமி பாலத்திற்கு அழைத்து சென்ற அவர், திடீரென கீர்த்தனாவை நதியில் தள்ளிவிட்டுள்ளார்.
சமயோஜிதமான செயல்பாடு
நதியினுள் தள்ளிவிடப்பட்ட கீர்த்தனா சுதாரித்துக்கொண்டு, பாலத்தில் அமைந்திருந்த pipe ஒன்றை பிடித்துக்கொண்டு தவித்துள்ளார். கீர்த்தனாவே தனது ஒற்றை கையால் pipe'ஐ பிடித்து கொண்டு மற்றொரு கையால் தன்னிடம் இருந்த செல்போனில் அருகிலுள்ள ரவுலபாலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிருக்காக போராடி கொண்டிருந்த கீர்த்தனா மீட்டுள்ளனர். போலீசார் அந்த இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த சுரேஷ் தப்பித்து சென்றுள்ளார். தற்போது அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.