ரவீந்தரை பார்த்து கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா...ன்னு பாடிய மகாலட்சுமி - வாயடைத்த ரசிகர்கள்

Tamil Cinema Married
By Nandhini Sep 07, 2022 03:12 PM GMT
Report

கணவர் ரவீந்தரை பார்த்து மகாலட்சுமி கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா...ன்னு பாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரவீந்தர் திருமணம்

சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார்.

மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.

கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி

தற்போது, இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ravindar-married-actress-mahalakshmi

குண்டு கத்திரிக்காய்.. பாட்டு பாடிய மகாலட்சுமி

திருமணத்திற்கு பிறகு கணவனும், மனைவியும் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு சேனலுக்கு போட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது, கணவருக்காக பாட்டு பாடியிருக்கிறார் மகாலட்சுமி.

டூயட் படத்தில் பிரபுவுக்காக எழுதப்பட்ட ‘கத்திரிக்கா... கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா... எந்த கடையில நீ அரிசி வாங்குற... என்று ரவீந்தர் சந்திரசேகரனை பார்த்து பாடியிருக்கிறார் மகாலட்சுமி.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. சிரித்துக் கொண்டே... அய்யோ.. இந்த ரவீந்தருக்கு இது தேவை தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.