கழுத்தில் மஞ்சள் தாலி சரடில் மின்னிய மகாலக்ஷ்மி; பூரிப்பில் ரவீந்தர்…வெளியான புகைப்படம் - குவியும் வாழ்த்து!
ரவீந்தர் திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.
கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி
சமீபத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹனிமூன் குறித்து பேசிய ரவீந்தர்
சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில், ஐரோப்பா அல்லது லண்டனில் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும், தல தீபாவளி கொண்டாடிவிட்டு, நவம்பர் மாதம் ஹனிமூனுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
ரவீந்தர்-மகாலக்ஷ்மி வீட்டில் விசேஷம்
இந்நிலையில் ரவீந்தர் மகாலக்ஷ்மி வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது. மகாலக்ஷ்மி அணிந்திருந்த மஞ்சள் கயிறை பிரித்து கோர்த்துள்ளனர். மகாலக்ஷ்மியின் மஞ்சள் கயிறை மாற்றி தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வு நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரவீந்தர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கணவன்-மனைவி இருவரும் மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.