உங்க கூட குழந்தை பெத்துக்க ஆசை - கண்டிஷன் போட்ட மகாலட்சுமி…!
உங்க கூட குழந்தை பெத்துக்க ஆசை என்று ரவீந்தரிடம் மஹாலட்சுமி கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவீந்தர் திருமணம்
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட ட்ரோல் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தாலும், இருவரும் அதையெல்லாம் கண்டுக்காமல் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளனர்.
கட்டியணைத்து தூங்கிய மகாலட்சுமி
தற்போது, இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன் காதல் கணவர் ரவீந்தரை கட்டியணைத்து நெஞ்சில் மகாலட்சுமி படுத்து தூங்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை
சமீபத்தில் ஒரு சேனலுக்கு இருவரும் பேட்டி கொடுத்தனர். அப்போது பேசிய மஹாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, நான் உங்களுடன் குழந்தை பெற்று கொள்வேன். வயது, பிற காரணங்களுக்காக நான் நோ சொல்ல மாட்டேன் என்று தான் அவரிடம் நான் கண்டீஷன் போட்டேன். என்னுடைய இந்த ஆசைக்கு ரவீந்தர் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார். இதைக்கேட்டு ரவீந்தர் வீட்டு குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டனர்.
நான் என்று கூறினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்களுக்கு சிலர் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். சமீப காலமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், மஹாலட்சுமி குழந்தை பெற்றுக்கொள்ளவேன் என கூறியுள்ளதற்கு வாழ்த்துக்களை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.