பாசிட்டிவாக இருங்கள்... கொரோனாவை வெல்லலாம்... ராஷ்மிகா அறிவுரை
கொரோனா போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவாக இருங்கள் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு பரவிய முதல் அலையை விட இரண்டாம் அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களிடையே மிகுந்தளவு பீதி ஏற்பட்டு நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர்.
அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் உற்சாகமூட்டும் வகையில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஊக்குவிக்கும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாதுகாப்பாக இருப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது குறித்து பேசியுள்ளார். சாதாரண நபர்கள் எப்படி தங்கள் அக்கம்பக்கத்தினருக்கு உதவுகின்றனர் என்பது குறித்தும், நாம் யாரும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இந்த போராட்டத்தை ஜெயிக்க பாசிட்டிவ் எண்ணத்துடன் எதிர்கொள்வது அவசியம் என்றும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.