காதலன் கழுத்தில் கத்தி; மாணவியை தூக்கிச் சென்று சீரழித்த கும்பல்!

Kanchipuram Sexual harassment Crime
By Sumathi Jan 14, 2023 04:47 AM GMT
Report

 காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரம், விப்பேடு-குண்டுகுளம் எல்லை பகுதியில் கல்லூரி மாணவன் தனது காதலியை தனிமையில் சந்தித்துள்ளார். அங்கு காலி வீட்டுமனை பகுதியில் இருவரும் பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது, அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த மர்ம கும்பல் இவர்களை பார்த்துள்ளனர்.

காதலன் கழுத்தில் கத்தி; மாணவியை தூக்கிச் சென்று சீரழித்த கும்பல்! | Raping A College Girl In Kanchipuram

போதையில், காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

4 பேர் கைது

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விமல், சிவக்குமார், தென்னரசு ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.