நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீண்டும் 5வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

Sexual harassment Crime Madhya Pradesh
By Jiyath Aug 17, 2023 04:59 PM GMT
Report

நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராகேஷ் வர்மா என்ற நபர் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார். அவரின் நன்னடத்தை காரணமாக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீண்டும் 5வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! | Rape Convict Commits Same Crime On Another Minor

இந்நிலையில் வெளியில் வந்த அவன் 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை காப்பாற்ற வந்த பாட்டி அவனை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த நபர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுமியை கண்டு பிடித்துள்ளனர்.

போக்ஸோ வழக்கு

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட பின்னர் ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த கொடூர நபர் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.