ரஞ்சி கோப்பை போட்டிகளின் தேதி மாற்றம்
நவம்பர் 16 முதல் நடைபெறுவதாக இருந்த ரஞ்சி கோப்பைப் போட்டி, ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளதாக மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது பிசிசிஐ. இதில் ரஞ்சி கோப்பைப் போட்டி நவம்பர் 16- இல் தொடங்கி பிப்ரவரி 19-ல் முடிவடைவதாக அறிவித்தது.
இந்நிலையில் ரஞ்சி போட்டிக்குத் தயாராவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததால் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ரஞ்சி கோப்பைப் போட்டி ஜனவரி 5 இல் தொடங்கி மார்ச் 20 இல் முடிவடையவுள்ளது. இதனால் அக்டோபர் 20- இல் தொடங்க இருந்த சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பைப் போட்டி, அக்டோபர் 27 இல் தொடங்கி, நவம்பர் 22 இல் முடிவடையவுள்ளது.
அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி, டிசம்பர் 1 முதல் 29 தேதிகளில் நடைபெறவுள்ளது.

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச IBC Tamil

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்த மக்கள் : நடுவீதியில் வெடித்த போராட்டம் IBC Tamil
