இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ரணில் விக்ரமசிங்கே..!
இன்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ரணில் விக்ரமசிங்கே. நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 225 எம்.பிக்கள் வாக்களித்தனர்.
அதிபரை தேர்ந்தெடுக்க 113 பேரின் ஆதரவு தேவை.இந்த நிலையில் இந்த அதிபர் தேர்தலில் சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 219 வாக்குகள் மட்டும் செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்ட நிலையில் எண்ணப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.