திடீர் திருப்பம்...வெற்றியை தக்க வைக்கும் ரணில் விக்ரமசிங்கே?
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதிபர் தேர்தல்
மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா குமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவிற்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பாதி பேர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளித்துள்ளதால் இலங்கையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் டலஸ் அழகபெருமாளுக்கு அதிக ஆதரவு இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு கூடியுள்ளது.