ஸ்டாலின் செந்தில் பாலாஜியை ஊழல்வாதின்னு சொல்லிட்டு அமைச்சர் ஆக்கியிருக்கிறார் - ரங்கராஜ் பாண்டே பேட்டி..!

M. K. Stalin DMK
By Thahir May 13, 2022 09:59 PM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை ஊழல்வாதின்னு சொல்லிட்டு அமைச்சர் ஆக்கியிருக்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் மெய்பொருள் நிகழ்ச்சியில் பேசிய அவர்,திமுக ஒரு வருடம் கடந்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் போக வேண்டிய துாரம் அதிகம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

அதைத்தான் நானும் நினைப்பதாக தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை சொல்வதற்கு நிறைய பேர் அனைத்து இடங்களிலும் உள்ளனர்.

ஆனால் என்ன செய்யவில்லை என்று நினைவூட்ட விரல் விட்டும் எண்ணும் அளவிலே உள்ளனர். அந்த வகையில் அதை நினைவூட்டுவதற்கு அதை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.